புதன், 18 நவம்பர், 2009


10, 2009

சலனம்
எனக்குள் ஒரு அமைதியை
எப்போதும் தேடிக் கொண்டிருக்கிறேன் ..
சலசலத்தோடும் ஆற்றின் கரையில்
மரங்கள் வீசும் பலத்த காற்றில்
உள் மனம் ஆடிக் கொண்டிருக்கிறது ..
ஒரு குழந்தையின் புன்னகை கூட
என்னை ஈர்ப்பதில்லை அப்போது ..
எப்படியும் கண்டு பிடித்து விடுவேன்
எனக்கான நிச்சலனத்தை ..
கற்றுக் கொண்ட ஆசனங்கள் வழியே
உடல் மடங்கிக் கிடந்தாலும்
பார்வை ஜன்னல்கள் கதவடைத்துக்
கொண்ட போதும்
மனசின் சாளரம் திறந்து கிடக்கிறது ..
ஒரு பூகம்பம் வருமென
எதிர்பார்த்து
அனலடிக்கும் புத்திக்குத் தெரியாது ..
கைக்கெட்டும் தூரத்தில் தான்
இருந்து கொண்டே இருக்கிறது
எனக்கான அமைதி என்று !