வியாழன், 19 மே, 2011

கண்மணியே…

காற்றோடு வந்த நறுமணமும்
சிறுவலையாக ஆடுமவள்
கூந்தலின் கருவண்ணமும்
கொண்டே கண்டு மகிழுமோ
என் மனமும்தான் ஓர்
மயவுலகில் ஆழ்கடலில்
ஓர் தருணம்?
பாலைவன மணலில்
நட்சத்திர வொளியில் தெரியுதவளது
பதிந்த பாதம் ஒவ்வொன்றும்
தடையங்கள் செல்லுமிடம் யாவும்
இருள் ஒன்றே சூழும் போலும்
எங்கேயடிச் சென்றா யென்கண்மணியே
உன்னையன்றி யென்பொய்
புன்னகையும் விம்மும் எந்நேரமும்!
இடைவிடாது துடிக்கும் இதயத்தின்
இடையே கசியுதடிவோர்
இனந்தெரியாத துன்பம்
குழலின் சோகத்திலுள்ள வோர் ஓலக்
குரல் அதை வருடவே எப்பொழுதும்!
என் நெடு மூச்சில் படும் உன் நினைவுகள்
கடுங்குளிரில் சுகமாக சுடுமனலாகும்!
பண்ணுள் மிகுந்த இசையது என்
கண்ணுள் வடியும் நீரைத்
தன்னோடுக் கரைத்து
தருமோவோர் அடைக்களம்
அதனலை கொண்டு
காற்றில் படர்ந்து
கருத்த இவ்வனத்தில்
கொண்டு சேர்க்குமோ
என்னை உன்னிடம்?
என் கண்மணியே…